• Breaking News

    விவாதப் போட்டியில் வலிகாமம் தென்மேற்கு - மானிப்பாய் பிரதேச சபை முதலிடம்...!

     


    இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான தமிழ் மொழி மூலமான விவாத போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை வலிகாமம் தென்மேற்கு - மானிப்பாய் பிரதேச சபையின் விவாத அணி பெற்றுக்கொண்டுள்ளது.

    இரண்டாமிடத்தினை மட்டக்களப்பு  மண்முனைப்பற்று பிரதேசசபை பெற்றதுடன் மூன்றாமிடத்தினை புதுக்குடியிருப்பு பிரதேசபை
     பெற்றுக்கொண்டது.

    முதலாமிடத்தை பெற்றுக்கொண்ட மானிப்பாய் பிரதேசசபையின் விவாதகுழுவில்
    தவிசாளர்  அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் உறுப்பினர்களான அருட்குமார் ஜோன் ஜிப்பிரிக்கோ,
    கந்தையா ஜெசிதன் , லோகப்பிரகாசம் ரமணன் ,  சிவசண்முகநாதன் அனுசன் உள்ளிட்டவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

    அணியின் தலைவராக உறுப்பினர்  கந்தையா ஜெசிதன் செயற்பட்டிருந்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad