• Breaking News

    100 ஆண்டுகள் பழமையான மரத்தினை வெட்டியவருக்கு நேர்ந்த கதி...!

     


    திருகோணமலை - கோணேஸ்வரம் கோவில் பிரதேச தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான பிரதேசத்தில் உரிய ஆவணங்கள் இன்றி மரம் வெட்டிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மரம் வெட்டுவதற்கு பயன்படுத்திய பொருட்களையும்  காவல்துறையினர் எடுத்துச் சென்றனர்.

    குறித்த மரம் சுமார் 100 வருடங்கள் பழமையானது.

     மரத்தின் ஒரு கிளையானது முறிந்து விழுந்ததில் வியாபாரத்திற்கு அபாயகரமானதாக காணப்பட்டதாக தெரிவித்து கடை உரிமையாளரினால் தொல்பொருள் திணைக்கள அதிகாரிக்கு தெரியப்படுத்தப்பட்டு அவரின் உத்தரவின் பெயரில் குறித்த மரத்தை அப்புரப்படுத்தியதாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.

    எனினும் உரிய தொல்பொருள் திணைக்கள அதிகாரியிடமிருந்து மரம் தரிப்பதற்கான ஆவணங்கள் வழங்கப்படாது இருந்த காரணத்தினால் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

     கைது செய்யப்பட்ட நபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில் நாளை நீதிமன்றத்தில் முன்னிலையாகி உரிய ஆவணங்களை சமர்பிக்குமாறு  அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad