• Breaking News

    கனடாவுக்கு சடட்விரோதமாக செல்ல முயன்ற இலங்கையர்கள்! அதிரடி கைது செய்த கடற்படையினர்

    கனடாவுக்குச் சட்விரோதமாக செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 1 பெண், 4 சிறுவர்கள் உள்ளிட்ட 21பேர் கடற்படையினரால் நேற்றுக் காலை அதிரடியாகக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    Arrest - Representational Image

    கடற்படையினர் தமக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.  

    சந்தேகத்துக்கிடமான வாகனமொன்று சிலாபம் முகத்துவாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.  இதனை சோதனையிட்ட கடற்படையினர் உடனடியாக அந்த குழுவினரை கைது செய்யப்பட்டுள்ளனர. 

    கைதானவர்களில் 16 பேர் ஆண்கள், ஒருவர் பெண், நான்கு சிறுவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது இவர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வத்தளை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலநறுவை, நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனத் தெரியவந்துள்ளது. 

    குறித்த சம்பவம் தொடர்பாக கடற்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்தாகும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad