• Breaking News

    16 வயதுச் சிறுவனுக்கு 14 வயதுச் சிறுமி மீது மலர்ந்தது காதல் ; உடைந்தது அம்மாவின் ஐ போன் - யாழில் சம்பவம்!

     


    யாழில் பிரபல தனியார் பாடசாலை 16 வயது மாணவன் தனது அயலில் உள்ள 14 வயது மாணவியுடன் தனது அம்மாவின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைப்பதை கண்டு பிடித்த தந்தை தனது மனைவியின் பெறுமதிமிக்க ஐபோனை நொருக்கிய சம்பவம் அண்மையில் யாழ். வலிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.


    தனது தாயின் போனில் தனது வீட்டுக்கு அயலில் வசிக்கும் 14 வயதான மாணவிக்கு வட்சப்பில் தொடர்பு கொண்டு மாணவன் காதல் லீலைகள் புரிந்துள்ளார். மாணவனுடன் வட்சப்பில் மாணவி கதைப்பது மற்றும் சற்றிங் செய்வதை மாணவியின் தாய் அவதானித்து மாணவியை கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளார்.


    அதன் பின்னர் அந்த நம்பர் யாருடையது என அவர் விசாரித்து அறிந்து மாணவனின் தாயுடையது என கண்டு பிடித்து மாணவனின் தாயிடம் மகன் தொடர்பான விபரத்தை கூறி இவ்வாறு நடக்க விட வேண்டாம் எனவும் மாணவியின் தாயார் அறிவுறுத்தியுள்ளார். இந்த விடயம் மாணவனின் தந்தைக்கு தெரியாமல் தாயாரால் மறைக்கப்பட்டுள்ளது.


    இருந்தும் மாணவன் மீண்டும் மாணவிக்கு நள்ளிரவு வேளைகளில் வட்சப்பில் தொடர்பு கொண்டதை அறிந்த மாணவியின் தாயார் உடனடியாக மாணவனின் தந்தைக்கு இதனை தெரிவித்த போதே தந்தை கடும் கோபம் கொண்டு மாணவனை தாக்கியதுடன் மனைவியின் பெறுமதி மிக்க ஐபோனையும் அடித்து நொருக்கியதாக தெரியவருகின்றது.


    அத்துடன் மாணவனின் மற்றுமொரு நண்பனும் இந்த காதல் விடயத்தில் தொடர்பானவர் என அறிந்து அந்த மாணவனின் வீட்டுக்கு சென்று தர்க்கம் புரிந்ததாகவும் அதன் காரணமாக நண்பனின் தந்தை பொலிசாரின் உதவியை நாடி தற்போது பொலிசாரின் விசாரணைகளுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரியவருகின்றது. மாணவனின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் பிரபல வங்கிகளில் முக்கிய அதிகாரிகளாகக் கடமையாற்றுவதாகத் தெரியவருகின்றது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad