• Breaking News

    யாழில் மதுபோதையில் வாகனம் செலுத்திய இ.போ.ச பேருந்துவின் சாரதி பொலிஸாரால் கைது!

     


    மது அருந்திவிட்டு பயணிகள் பேருந்தை செலுத்தி சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி ஒருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


    இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,


    நேற்றிரவு 7  மணியளவில் காரைநகர் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை செலுத்திய சாரதி ஒருவரே மது போதையில் காணப்பட்டுள்ளார். 


    இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மானிப்பாய் பொலிஸார் சண்டிலிப்பாய் கட்டுடை பகுதியில் குறித்த பேருந்தினை வழி மறித்து சாரதியை பரிசோதித்துள்ளனர். 


    இதன் போது சாரதி மது போதையில் இருந்தமையை உறுதி செய்ததை அடுத்து அவரை கைது செய்தனர்.  அதேவேளை பிறிதொரு சாரதியை வரவழைத்து பேருந்தினை அனுப்பி வைத்தனர். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad