• Breaking News

    யாழ். ராணி ரயிலில் பயணித்த அரச அலுவலர்கள் தலை தெறிக்க தப்பியோட்டம்!

     


    வழமைப்போல் யாழ்.ராணி தொடருந்தில் கிளிநொச்சி நோக்கி பயணித்த உத்தியோகத்தர்களில் சிலர் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளாது பயணித்துள்ளனர். மிக குறைந்த கட்டணமாக உள்ள போதும் அதனை பெற்றுக்கொள்ளாது பயணித்துள்ளனர்.


    நேற்றைய தினம் பயணச்சீட்டு சோதனை செய்யும் தொடருந்து திணைக்கள அதிகாரிகள் பயணிகளிடம் சோதனைகளை மேற்கொண்ட போது ஒரு சிலர் பயணச்சீட்டு இன்றி பயணித்தமை கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் பயணக்கட்டணமும் தண்டப்பணமும் அறவிடப்பட்டுள்ளது.


    அத்துடன் மூன்றாம் வகுப்புக்கு பயணச்சீட்டை பெற்றுவிட்டு இரண்டாம் வகுப்பில் பயணித்தவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் கிளிநொச்சி நோக்கி பயணித்த மேலும் சிலர் தொடருந்து திணைக்கள அதிகாரிகளின் சோதனைக்கு முன்பாகவே இடைநடுவில் பளை தொடருந்து நிலையத்தில் இறங்கி சென்றமையினையும் அவதானிக்க முடிந்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad