• Breaking News

    படுக்கையில் சுற்றப்பட்டு வீசப்பட்ட பெண்ணின் சடலத்தினால் பரபரப்பு!

     


    வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வர்த்தக நிலையத்திலிருந்து பெண் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவரது மகள் வெலிமடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

    இந்நிலையில், பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பிரகாரம் நேற்று (24) குறித்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் உடல் படுக்கை விரிப்பில் சுற்றப்பட்டு ஹோட்டல் அருகே உள்ள காலி கிணற்றில் வீசப்பட்டது.

    உயிரிழந்தவர் புரங்வெல பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் வேறொரு நபருடன் சேர்ந்து ஹோட்டல் நடத்தி வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

    இந்நிலையில், இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, அதன் காரணமாகவே கொலை நடந்துள்ளதாப பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சந்தேக நபர் தலவாக்கலை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதேவேளை, கலஹா பொலிஸ் பிரிவிலும் ஒரு கொலை சம்பவம் பதிவாகியுள்ளது, 45 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

    உயிரிழந்தவர் லஹா, பெல்வுட் காலனியில் வசிப்பவர் எனவும், அவர் வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும், நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பலுடன் மது அருந்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

    சந்தேகநபர்கள் 40 மற்றும் 52 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கலஹா பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad