• Breaking News

    யாழில் பிரபல ஆசிரியர் விபத்துக்குள்ளாகி பலி - பதில் நீதிவானும் சாரதியும் பொலிஸாரால் கைது!

     


    யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்திற்கு அண்மையில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் பிரபல அளவையியல் ஆசிரியர் உயிரிழந்துள்ளார்.

    யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியரான வேலுப்பிள்ளை யுகபாலசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

    நேற்றிரவு மாவட்ட செயலகத்தை அண்மித்த வீதியில் பதில் நீதிவான் ஒருவருடைய கார் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த

    நிலையில் சடுதியாக காரின் கதவு திறக்கப்பட்டுள்ளது. அந்த வீதியால் பயணித்த ஆசிரியர், காரின் கதவு மீது மோதி வீதியில் விழுந்துள்ளார்.

    இதன்போது, பின்னால் வந்த பேருந்து ஆசியரியர் மீது மோதியுள்ளது.

    ஆசிரியர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட

    நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    விபத்து இடம்பெற்ற உடன் காயம் அடைந்தவரை வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்க விபத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என உயிரிழந்த ஆசிரியரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    பதில் நீதிவானும், அவரது சாரதியும் இன்றைய தினமே பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில், பதில் நீதிவானின் சாரதியும், பேருந்து சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad