• Breaking News

    சிறுமிக்கு எமனாக மாறிய ஜம்பு பழம்!

     


    மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் பிளாஸ்டிக் பீப்பாய் ஒன்றினுள் 3வயது சிறுமி தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

    நேற்று பிற்பகல் குறித்த சிறுமி வீட்டிலிருந்த வேளை தண்ணீர் குழாய் இருக்கும் இடத்திற்குச் சென்றுள்ளார்.

    அதன் போது அங்கு இருந்த சிறிய பிளாஸ்டிக் பீப்பாயில் கையிலிருந்த ஜம்பு பழத்தை போட்டுள்ளார்.

    பின்னர் அந்த பழத்தை மீண்டும் எடுப்பதற்கு முயற்சித்த வேளை சிறுமி தலைகீழாக பீப்பாய்க்குள் தவறி வீழ்ந்துள்ளார்.

    23 அங்குலம் உயரம் கொண்ட அந்த சிறியரக பீப்பாயில் 8 அங்குலம் அளவில் அதனுள் தண்ணீர் இருந்துள்ளது.

    தந்தை உறவினர் வீடொன்றிற்கு வெளியில் சென்றிருந்த நிலையில் தங்கை வீழ்ந்துள்ளதை அவதானித்த சிறுமியின் அண்ணா (5 வயது) வீட்டிற்குள் சமைத்துக் கொண்டிருந்த தாயிடம் கூறியுள்ளார்.

    உடன் விரைந்து மகளை மீட்டதாய் அயலவர்களின் உதவியுடன், உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். எனினும் சிறுமி உயிரிழந்துள்ளது.

    இந்நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் சடலத்தை, களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.ஜீவராணியின் உத்தரவுக்கமைய இன்று  சடலத்தைப் பார்வையிட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம், பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும்படியும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad