• Breaking News

    இலங்கை இராணுவத்துக்கும் பாடசாலை மாணவர்களுக்குமிடையே மோதல் - மூன்று இராணுவத்தினர் காயம்!

     கம்பஹா - மினுவாங்கொடை பகுதியில், இலங்கை இராணுவத்தை சேர்ந்த சிலருக்கும் பாடசாலை மாணவர்களிற்கும் இடையில் கடும் மோதல்  சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இவ்வாறு இடம்பெற்ற மோதலில் சிறிலங்கா இராணுவத்தை சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

    கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தில் தற்போது பணியாற்றும் வவுனியா பாதுகாப்பு படை தலைமையகத்தை சேர்ந்த மூன்று சிறிலங்கா இராணுவத்தினர் மினுவாங்கொடையில் பாடசாலை மாணவர்கள் ஏழு பேருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த மோதலிற்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை எனவும் சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad