• Breaking News

    காரைநகர் - கசூரினா கடற்கரையில் நீராடச் சென்ற ஒருவர் மாயம்!

     


    காரைநகர் - கசூரினா கடற்கரைக்கு நீராடச்சென்ற 20 பேரில் ஒருவர் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார்.

    இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

    உரும்பிராயை சேர்ந்த 20 பேர் கசூரினா கடற்கரைக்கு நீந்துவதற்கு சென்றனர். அவர்கள் கடலில் நீந்திக்கொண்டிருக்கும் வேளை திடீரென இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

    இதன்போது ஒருவர் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டார். மற்றையவர் நீரில் காணாமல் போயுள்ளார்.

    காணாமல் போனவரை தேடும் பணியில் கடற்படையினரும் பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad