• Breaking News

    பிரதமர் பதவியை ஏற்கத் தயார்! ரணில் தரப்பின் பகிரங்க அறிவித்தல்

     


    சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தால், அந்த அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

    ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே  அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

    இதனை விடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளில் இருந்து அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக, அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுக்க ரணில் விக்ரமசிங்க தயாரில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad