• Breaking News

    குளிரூட்டிக்கான வாயு வெடித்ததில் இளைஞர் பலி!

     


    நட்சத்திர விடுதி ஒன்றில் குளிரூட்டிக்கான வாயு (A/C GAS) வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    கண்டி – இரண்டாவது ராஜசிங்க மாவத்தையிலுள்ள விடுதியில் இன்று குளிரூட்டிக்கான வாயு திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த தருணத்தில், இந்த வெடிப்பு சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    வெடிப்பு சம்பவத்தில் தீ காயங்களுக்கு உள்ளான இளைஞன், பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

    குளிரூட்டி வாயு திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், அந்த நிறுவனத்தில் பணிப்புரியும் ஊழியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad