• Breaking News

    யாழ். மண்கும்பானில் மாடு முட்டியவர் பரிதாபமாக சாவு!

     


    யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியில் மாடு முட்டியதனால் படுகாயமடைந்த முதியவர் ஒருவர்  சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்தார்.

    இச்சம்பவத்தில் 4ஆம் வட்டாரம், மண்கும்பான் என்னும் முகவரியைச் சேர்ந்த நல்லையா கணேஸ்வரன் (வயது 62) என்ற 8 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.

    மண்கும்பான் பிள்ளையார் ஆலயத்தின் மெய்ப்பாதுகாவலராக பணியாற்றும் இந்த முதியவர் கடந்த 29ஆம் திகதி ஆலயத்திற்கு சொந்தமான மாடு ஒன்றை கட்ட முற்பட்டபோது மாடு முட்டி வயிற்றில் பெரும் காயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனளிக்காது 5ம் நாள் நேற்று  உயிரிழந்தார்.

    உயிரிழந்தவரின் மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad