• Breaking News

    கோட்டாபயவுக்கு எதிரான அவதூறு தகவல்கள்! பாய்கிறது புதிய சட்ட நடவடிக்கை

     


    அரச தலைவர் கோட்டாபயவை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ அறிக்கைகளை வெளியிடவோ அல்லது பரிமாறிக் கொள்ளவோ முடியாது என காவல்துறை ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அதிகாரம் உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், அரச தலைவரை அவமதிக்கும் வகையில் குழுவொன்று வழங்கிய கருத்துப் பரிமாற்றம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் பெண்ணொருவரிடம் விசாரணை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad